தஞ்சை கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிய வழக்கு : தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்

Published by
Venu
  • தொல்லியல் துறையின் முறையான அனுமதி பெறவில்லை எனவே  குடமுழுக்கு  நடத்த தடை விதிக்கவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் குடமுழுக்கு தமிழில்  நடத்த வேண்டும் என  ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.ஆனால் ஆண்டாண்டு காலமாக ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடத்த வேண்டும்  என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.உயர்நீதிமன்ற மதுரை  கிளையில்,குடமுழுக்கு தொடர்பாக ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் மனுதாக்கல் செய்து இருந்தனர்.அந்த மனுக்களில், தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல்  நடத்த உள்ளனர்.புராதன தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த முறையான அனுமதி பெறவில்லை.குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மீதான விசாரணையில் ,தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்தது.குடமுழுக்கு என்ன மொழிகளில் செய்யப்படும் என்பதை இன்று பிரமாணபத்திரமாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு  உத்தரவு பிறப்பித்து வழக்கை இன்று ஒத்திவைத்தது.இந்நிலையில் இன்று அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.அதில், ஆகம விதிப்படியும்,தமிழிலும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் நடைபெறும் குடமுழுக்கு அன்று கருவறை முதல் கோபுரம் வரை சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recent Posts

”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!

”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!

டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…

28 minutes ago

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

2 hours ago

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

2 hours ago

சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…

3 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…

3 hours ago

வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…

4 hours ago