ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் வைரலாகும் “ஹிந்தி தெரியாது போடா” என்ற டி-ஷர்ட்டை, திருப்புர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வடிவமைத்துள்ளளார்.
சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் புகைப்படம் ஒன்று, சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் அவர், I am a தமிழ் பேசும் indian என பதியப்பட்ட டி-சர்ட் அணிந்திருந்தார். அவரது உடன் இருந்தவர் hindi theriyaathu poda (ஹிந்தி தெரியாது போடா) என பதியப்பட்ட டி சர்ட் அணிந்திருந்தார்.
அவர்கள் அணிந்த அந்த டி-சர்ட் உலகளவில் ட்ரண்டானதை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் அந்த டி-சர்ட் மீது ஆர்வம் காட்ட தொடங்கினார்கள்.
இந்தநிலையில், இந்த டி-சர்ட்களை வடிவமைத்து உருவாக்கியவர், திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர். இவர் திருப்பூர் மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார். கார்த்திகேயன், கடந்த 5 ஆண்டுகளாக பின்னலாடை உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரிடம் இந்த டி-சர்ட் டிசைன்களை கொடுத்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆர்டர் வழங்கினார். முதல் கட்டமாக, 1,500 டி-சர்ட் தயாரித்து கொடுத்தார். நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அணிந்ததை தொடர்ந்து, அந்த டி-சர்ட் அடுத்து ஒரே நாளில் உலகளவில் ட்ரண்ட் ஆனது.
இதன்காரணமாக, அவருக்கு தற்பொழுது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டி-சர்ட்களுக்கான ஆர்டர்கள் வந்துள்ளதாகவும், குறிப்பாக அமெரிக்கா, கத்தார் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…