[Representative Image]
கரூரில் சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் ஐ.டி அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை
நேற்று முதல், சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது, திமுகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களது அடையாள அட்டையை காட்டுமாறு மிரட்டி, தாக்கியதாக கூறப்பட்ட நிலையில், 4 அதிகாரிகள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று, கரூரில் சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் ஐ.டி அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனை நிறைவடைந்த நிலையில், சோதனை முடிவில் ஒரு லேப்டாப் மற்றும் ஒரு ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வீட்டில் 30 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டிருந்த லாக்கருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…