ஆகஸ்ட் 12 வரை விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு தடை!

Published by
Rebekal

விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 12 வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆடிப்பெருக்கையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆடி பெருக்குக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது.

குறிப்பாக விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 12 வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதர் ரெட்டி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் ஆகஸ்ட் 12 வரை பக்தர்கள் வழிபாடு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.

விலங்குகள் பலியிடுதல், திருவிழா நடத்துதல், ஜெபக் கூட்டங்கள், மசூதிகளில் தொழுகை, ஊர்வலங்கள், நேர்த்திக்கடன் செலுத்துதல் உட்பட்ட அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உட்பட ஏனைய கோவில்களில் இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை தரிசனத்துக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திமுக காரணமா? அன்புமணி சொன்னது அப்பட்டமான பொய்” – ராமதாஸ் விளக்கம்!

திமுக காரணமா? அன்புமணி சொன்னது அப்பட்டமான பொய்” – ராமதாஸ் விளக்கம்!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…

21 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரா என்னால் 3 போட்டி தான் விளையாட முடியும்! பும்ரா எடுத்த முடிவு!

லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…

2 hours ago

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…

2 hours ago

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

3 hours ago

லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!

மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

5 hours ago

அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…

5 hours ago