MK Stalin : ஜனநாயகம், சமூகநீதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து.!

Published by
மணிகண்டன்

நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் “கலைஞர் 100 – விகடனும் கலைஞரும்” என்ற பெயரில் நூல் வெளியிடப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் மூத்த அமைச்சர், மூத்த பத்திரிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அரசின் திட்டங்களை பாராட்டி எழுதுங்கள். அப்படி பாராட்டி எழுதும் போது தான், நீங்கள் வைக்கும் விமர்சனத்திற்கும் ஒரு மதிப்பு இருக்கும். அதனை விடுத்து விமர்சனங்களை மட்டும் எழுதினால் அந்த விமர்சனத்திற்கு மதிப்பு இருக்காது . சரியானதை ஆதரிப்பதும், தவறானதை சுட்டிக் காட்டுவதும் தான் பத்திரிக்கையாளர் தர்மம். அதன்படி ஊடகங்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கோரிக்கைகள் எனக்காக அல்ல. மக்களுக்காக. இந்த சமுதாயத்திற்காக. தற்போது ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமூக நீதி ஆகியவை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதனை அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். அதேபோல் பத்திரிக்கையாளர்கள் வாயிலாக, இந்தியா ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவில் கூட பத்திரிக்கையாளர் சுதந்திரத்தை பறிக்கும் பல அம்சங்கள் உள்ளன இந்த மாதிரியான செயலை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஜனநாயகம் காக்கப்பட்டால் தான் பத்திரிக்கை துறை என ஒன்று இருப்பது எதிர்காலத்தில் தெரியும் இது என்னுடைய அக்கறை இதனை இங்கே சுட்டி கட்ட விரும்புகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற விழாவில் உரையாற்றினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!

குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…

9 minutes ago

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

2 hours ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

2 hours ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

3 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

3 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

4 hours ago