தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்! பொது சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை!

Published by
கெளதம்

சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இம்மாவட்டங்களில் டெங்குவுக்கான வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 16ஆம் தேதி ‘தேசிய டெங்கு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. குறைந்தளவு விழிப்புணர்வு இருந்தாலே போதுமானது, தம்மை டெங்குவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

கொசுக்கள் மூலம் மட்டுமே இந்தக் காய்ச்சல் பரவும் என்பதால், கொசுக் கடியில் இருந்து நம்மை பாதுகாப்பதே டெங்குவை தடுக்க முதல் வழி. இதற்காக, நம்மைச் சுற்றியுள்ள நீர்த் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளும் உள்ளாட்சி நிர்வாகங்களும் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பருவமழை காலத்திலும் அதற்கு பிந்தைய காலத்தில், நோய் பரவும் அபாயம் இருக்கும் எனபதால், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் காய்ச்சல் அறிக்கைகள் சேகரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்கவும் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

4 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

5 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

7 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

7 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

8 hours ago