இந்தியா

பயோமெட்ரிக் முறையில் பயனாளிகளின் விவரங்கள்.. கலைஞர் உரிமைத் தொகை குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை.

மகளிர் உரிமைத்தொகை அதாவது பெயர் மாற்றம் செய்யப்பட்ட கலைஞர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் திட்டம் செயலாக்கம் தொடர்பாக தொடர்புடைய துறை அலுவலர்களுடன் கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

உரிமைத்தொகையை வழங்கும் முன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. பயனாளிகளை கண்டறிவது, நியாயவிலை கடைகளை கண்டறிவத்து குறித்தும், உரிமைத்தொகை வழங்கும் முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை  கூட்டத்தில் பேசிய, சென்னை மாநகராட்சி ஆணையர், தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு ரேஷன் கடைகள் கண்டறியப்பட்டுள்ளன.

குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் தேவையான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பள்ளி கூடங்கள், சமுதாய நல கூடங்கள், அரசு அலுவலகங்கள், இரவு காப்பகங்கள் என முகாம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் மூலம் பயோமெட்ரிக் முறையில் பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படும். பயோமெட்ரிக் கருவிகளை மண்டல அலுவலர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பயனாளிகளின் விவரங்களை சேகரிக்கும் முகாம்களுக்கான ஊழியர்கள் நியமனம் செய்யப்படும். முகாம்களில் பணியாற்ற பொறுப்பு அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர் உள்ளிட்ட ஊழியர்களும்  நியமனம் செய்யப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார். கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. தற்போது, அதற்காக அரசு மற்றும் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

9 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

9 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

10 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

10 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

11 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

13 hours ago