dig [Imagesource : Twitter@/Mkstalin]
தற்கொலை செய்துகொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல் சொந்த ஊரான தேனி அல்லிநகரத்தில் தகனம் செய்யப்பட்டது.
இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் தற்கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உடற்கூறாய்வு நிறைவடைந்து அவரது சொந்த ஊரான தேனி ரத்தின நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் டிஐஜி விஜயகுமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்நது, அவரது உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. அவரது உடலை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தோளில் தூக்கி சென்றனர். இதனை தொடர்ந்து, விஜயகுமாரின் சொந்த ஊரான தேனி அல்லிநகரத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…