மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்துள்ளது.
இதையடுத்து, வழக்கறிஞர் எம்.எல்.ஸ் ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில், பொது முடக்க காலத்தில் நான்கு மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால், வழக்கத்தைவிட மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
எனவே அதை இரண்டு, இரண்டு மாதங்களாக பிரித்து அதன் அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் விளக்கம் அளித்தது.
அதில், ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.
மேலும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்திற்கு உட்பட்டே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. தனிப்பட்ட நபர்கள் குறைகள் இருப்பின் அதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம் என நீதிபதிகள் கூறினர்.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…