ரஜினிக்கு உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

Published by
பாலா கலியமூர்த்தி

நடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் ரூ.65 லட்சம் கடன் பெற்றதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. சினிமா பைனான்சியரிடம் பெற்ற கடனை திருப்பி தரவில்லை என்றால் ரஜினி தருவார் என கஸ்தூரி ராஜா, முகுந்த் சந்த் போத்ராவுக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.  பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரஜினிக்கு உத்தரவிடக்கோரி போத்ரா வழக்கு தொடுத்திருந்தார்.

பெயரை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்தான் வழக்கு தொடர முடியும் என தனி நீதிபதி தெரிவித்து, நீதிமன்ற உத்தரவிட முடியாது என கூறி ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, ரூ.25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா இறந்துவிட்டதால் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அவரது மகன் ககன் போத்ரா மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீடு வழக்கில், ரஜினி பணம் தருவார் என்ற கடிதமே போலி, எவ்வித பணமும் தரவேண்டியது இல்லை என கஸ்தூரி ராஜா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மனுதாரர் தொடர்ந்து 3 முறைக்கு மேல் ஆஜராகவில்லை, இதனால் வழக்கை நடத்துவது குறித்து ஆர்வம் இல்லை என்றும் வழக்கை நடத்த ஆர்வம் காட்டாமல், இழுத்தடித்து நிலுவையில் வைப்பதேயே நோக்கமாக கொண்டுள்ளதால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

23 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

24 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago