பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட தோப்பு வெங்கடாசலம் முடிவு செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் என்பதால் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ள வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் தனக்கு வருகின்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.
பெருந்துறை தொகுதி வேட்பாளராக தன்னை அறிவிக்காமல் ஜெயக்குமார் என்பவரை அறிவித்ததால் அதிருப்தி என கூறப்படுகிறது. இன்று பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார். கடந்த 2011 மற்றும் 2016 -ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றவர் தோப்பு வெங்கடாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…