தூத்துக்குடியில் 14 கண்மாய்கள் 7 கோடியில் தூர் வாரி சீரமைபணிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்!

Published by
Rebekal

தூத்துக்குடியில் 14 கண்மாய்கள் 7 கோடியில் தூர் வாரி சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல் பொட்டை குளத்தின் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் 20 லட்சம் செலவில் தூர் வாரி கரைகளை பலப்படுத்த கூடிய பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் தூத்துக்குடியில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான மழைபொழிவு இருக்கும் எனவும், 70% மழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை இருக்கும்.

மழை காலத்திற்கு முன்பதாக நீர்நிலைகளை தூர்வாரும் நோக்கத்தில் தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொது பணித்துறை குளங்கள் தூர் வரப்படுகின்றன. இந்நிலையில் குலையன்கரிசல் ஊராட்சி பொதுமக்கள் விவசாயிகள் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து 20 லட்சம் தூர் வாரி கரைகளை பலப்படுத்த கூடிய பணிகள் செய்யப்பட உள்ளது. மேலும் குலையன்கரிசல் பகுதியில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் மூலம் எரிவாயு குழாய் பதிக்க கூடிய பணியும் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

5 minutes ago

விஜய் சட்டசபைக்கு கூட வர முடியாது…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…

27 minutes ago

“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…

10 hours ago

‘அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு?’ – விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில்.!

பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…

10 hours ago

சண்டைக் கலைஞர் உயிரிழப்பு: ”இனிமேல் இப்படி நடக்கவே கூடாது”- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…

10 hours ago

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…

11 hours ago