விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம்.? உண்மை நிலவரம் என்ன.?

Published by
மணிகண்டன்

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே இருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டார்.

தொடர் மருத்துவ சிகிச்சை… இன்றாவது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா.? உச்சநீதிமன்றத்தில் விசாரணை…

அப்போது, அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும், தேமுதிக கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு தற்போது வரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்த்துக்கு நுரையீரல் பகுதியில் சளி அதிகமாக உள்ளதால் அவ்வப்போது அவருக்கு மூச்சி விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அண்மையில் தேமுதிக சார்பில் வெளியான தகவலின்படி, செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என்றும், உடல் உறுப்புகளின் செயல்பாட்டை கண்காணிக்கவே ஐசியுவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும், தாமாகவே விஜயகாந்த் சுவாசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

உடல்நல பரிசோதனைகள் முழுதாக நிறைவடைந்த பிறகு நாளை மறுநாள் விஜயகாந்த் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

4 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

7 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago