DMDK Leader Vijayakanth [File Image]
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே இருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டார்.
அப்போது, அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும், தேமுதிக கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு தற்போது வரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்த்துக்கு நுரையீரல் பகுதியில் சளி அதிகமாக உள்ளதால் அவ்வப்போது அவருக்கு மூச்சி விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அண்மையில் தேமுதிக சார்பில் வெளியான தகவலின்படி, செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என்றும், உடல் உறுப்புகளின் செயல்பாட்டை கண்காணிக்கவே ஐசியுவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும், தாமாகவே விஜயகாந்த் சுவாசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
உடல்நல பரிசோதனைகள் முழுதாக நிறைவடைந்த பிறகு நாளை மறுநாள் விஜயகாந்த் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…