தேமுதிகவினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிளில் வந்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இதன் விலை உயர்வை காரணம் காட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய மாநில அரசுக்கு எதிராக தேமுதிக சார்பில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடந்த 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது போராட்டத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக போராட்டம் நடைபெறும் பகுதிக்கு முன்பாக 500 மீட்டர் இடைவெளியில் இருந்து சைக்கிள் மூலமாக பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வந்துள்ளார். கொரோனா காலம் என்பதால் போலீசார் சைக்கிள் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரித்த நிலையிலும் அவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…