மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என அக்கட்சி துணைத் தலைவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தொகுதி மற்றும் எண்ணிக்கை குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைப்பதா என மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எட்டப்படும் என அக்கட்சி துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி துணைத் தலைவர் பொன்ராஜ், விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர், அவரது தலைமையிலான தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையவேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக கூறியுள்ளார்.
மேலும், கூடிய விரைவில் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷை சந்தித்து, அவர்களை மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு அழைக்க இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனிடையே, தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மீண்டும் இன்று மாலை நடைபெறுகிறது. இதன்பின் தனித்து போட்டியா? அல்லது கூட்டணியா? என முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…