திமுக நிர்வாகி புகார்.., முதல்வர் பதிலளிக்க நோட்டீஸ்..!

Published by
murugan

கோவை திமுக நிர்வாகி சூலூர் ஏ. ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கோவை திமுக நிர்வாகி சூலூர் ஏ. ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் மாதம்  சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் சென்றுள்ளார். அவருக்கு நீரழிவு பிரச்சினை இருப்பதால் மேல் படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த பெண் போலீசாரிடம் வாய்மொழி புகார் அளித்தார். இதுகுறித்து  சூலூர் ஏ. ராஜேந்திரன்  அந்த பெண்ணிடம் கூறுகையில், தான்  உள்நோக்குடன்நடந்துகொள்ளவில்லை. நீரழிவு பிரச்சினை காரணமாக அவசரமாக இறங்கியதால் இந்த சம்பவம் நடந்ததாக அந்த பெண்ணிடம் விளக்கம் அளித்துள்ளார். பின்னர் அந்த பெண் சூலூர் ராஜேந்திரன் மீதான புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், ரயில் பயணத்தின் போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தேர்தல் பரப்புரையில் தன்னைப்பற்றி அவதூறாக பேசியதாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிராக சூலூர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Published by
murugan

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

5 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

6 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

6 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

7 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

7 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

8 hours ago