நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் அதிகம் வசூல் செய்வதாக பிரபலங்கள் உட்பட பலர் புகார் தெரிவித்தனர். இது குறித்து வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
அதில் , ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் மின் அதிகம் செலுத்த வேண்டி இருப்பதாக கூறியது. இதையடுத்து, நேற்று திமுக சார்பில் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் கறுப்புக்கொடியுடன் போராட்டம் நடத்திய நிலையில், தமிழகம் முழுவதும் கறுப்புக்கொடியுடன் தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், திருவாரூரில் தடையை மீறி போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் 1,050 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 76 இடங்களில் தடையை மீறி போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா உட்பட 1,050 பேர் மீது காவல்துறைவழக்குப் பதிவு செய்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…