தமிழ்நாடு

“திமுக என்பது ஒரு ஆலமரம்”…விஜய்க்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

Published by
பால முருகன்

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட த.வெ.க தலைவர் விஜய் ” மக்கள் விரோத ஆட்சிய திராவிட மாடல் அரசுனு சொல்லிட்டு மக்களை ஏமாத்துறீங்க.  எங்களுக்கு எந்த சாயமும் நீங்க பூச வேண்டாம். நாங்க ஏற்கனவே எங்களுக்கு ஒரு கலர் கொடுத்திருக்கோம்.  ஏ.பி, சி.டி டீம்னு எங்க மேல அவதூறு  பரப்ப முடியாது.

திராவிட மாடல்னு சொல்லி., தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பெயரை சொல்லி சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலகூட்டம் தான் நம்மளோட அரசியல் முதல் எதிரி. ” என தவெக மாநாட்டு நிகழ்வில் தவெக தலைவர் விஜய் திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் கடுமையாக தாக்கி பேசினார்.

இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய் திமுக பற்றி விமர்சனம் செய்து மாநாட்டில் பேசியிருந்தது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி கேட்கப்பட்டதற்கு ” யார் கல்லெறிந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தி திமுகவுக்கு உள்ளது” என பதில் அளித்திருக்கிறார்.

சென்னையில் அவரை செய்தியாளர்கள் சந்தித்தபோது த.வெ.க. தலைவர் விஜய் திமுக கட்சியை விமர்சித்து பேசியிருக்கிறார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆர்.எஸ்.பாரதி ”  திமுக என்பது ஒரு ஆலமரம் போன்றது. காய்த்த மரம்தான் கல்லடி படும். திமுக விமர்சனங்களை எதிர்கொள்ளும்.

யார் அரசியலுக்கு வந்தாலும் முதலில் திமுகவைத் தான் எதிர்ப்பார்கள். அப்படி விமர்சிப்பவர்களுக்கு நாங்கள் தக்க பதிலடியை  கொடுப்போம்” என விஜய் விமர்சித்து பேசியிருந்ததற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

1 minute ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

39 minutes ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

1 hour ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

4 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago