மறைந்த தலைவர்கள் குறித்து பேசக்கூடாது என்பதால் அமைதியாக உள்ளேன்- அமைச்சர் ஜெயக்குமார்!

Published by
Surya

கருணாநிதி ஆட்சியைப் பற்றி பேச நிறைய தகவல்கள் உள்ளதாகவும், மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசக்கூடாது என்பதால் அமைதியாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழக முன்னாள் முதல்வர் ராஜாஜியின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள அவரின் உருவப்படத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர், மறைந்த தலைவர்களைப்பற்றி அவதூறாகப் பேசக்கூடது என உத்தரவிட்ட போதும், அதனை மீறி ஆ.ராசா செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், கருணாநிதி ஆட்சியைப் பற்றி பேச நிறைய தகவல்கள் உள்ளதாகவும், மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசக்கூடாது என்பதால் அமைதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 2ஜி வழக்கு திமுகவினரின் தலையில் கத்தி தொங்குவது போல ஆபத்தானது என்றும், திமுகவினர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, சூரப்பா விவகாரம் குறித்து, முதல்வரிடம் ஆளுநர் எந்த விசாரணையும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

3 minutes ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

1 hour ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

2 hours ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

2 hours ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

13 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

13 hours ago