Vikravandi Bi-Election [file image]
இடைத்தேர்தல் முடிவுகள்: நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக வேட்பாளரான அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
கடந்த ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி நடைபெற்று வருகின்றது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.
இதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது அதில் திமுக வேட்பாளரான அன்னியூர் சிவா தான் முன்னிலை பெற்று வந்தார். அடுத்ததாக வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணப்படுகையிலும் முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று என தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வந்தார்.
தற்போது, 5 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 31,151 வாக்குகள் பெற்று சுமார் 19,600 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து பாமக வேட்பாளர் சி.அன்புமணி 11,483 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 2,275 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் 20 சுற்று வாக்கு எண்ணிக்கையில் இன்னும் 15 சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…