நீட் தேர்வுக்கு எதிராக போராட திமுகவுக்கு தகுதியில்லை.! அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்.!

Published by
மணிகண்டன்

இன்று சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து திமுக ஆர்ப்பாட்டம், அதிமுக பொதுக்குழு என பல்வேறு நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களை பதிவிட்டார்.

அவர் கூறுகையில், அதிமுக மாநாடு மதுரையில் பிரமாண்டமாக வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.  அதற்கு சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் வரும். 10 லட்சம் பேர் வருவார்கள் இதனை பொறுத்து கொள்ள முடியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் அன்றைய தினமே (ஆகஸ்ட் 20) திமுகவினர் உண்ணாவிர போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அன்றைய தினம் அதிமுக பொதுக்குழு பற்றி யாரும் பேசிவிட கூடாது என்பதற்காக தான் திமுக அதே தேதியில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தவுள்ளனர். என ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

எங்கள் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. பேனர் வைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதுவே அவர்கள் (திமுக) பேனர் வைக்க அனுமதி வழங்கபடுகிறது. பொள்ளாச்சியில் அதிமுக சார்பாக பலூன் பறக்கவிட்டதற்கு வழக்குப்பதிவு செய்கிறார்கள். இதெற்க்கெல்லாம் நாங்கள் பணிந்துவிட மாட்டோம். திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக நாங்கள் (அதிமுக) இருக்கின்றோம். என  ஜெயக்குமார் தெரிவித்தார்.

அடுத்து , நீட் தேர்வு பற்றி பேசிய ஜெயக்குமார், நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை. அவர்களது ஆட்சி காலத்தில் தான் கல்வி மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனை செய்யாமல் இருந்து இருந்தால் இந்நேரம் நீட் தொல்லையே தமிழகத்திற்கு இருந்து இருக்காது.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் எனும் சுவர் தகர்க்கப்படும் கூறுகிறார். நீட் தேர்வு தோல்வியால் ஒரு மாணவர் மற்றும் அவரது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது அந்த மாணவரின் நண்பர் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் அமைச்சர் உதயநிதி நிற்கிறார்.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழல் என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுக ஈடுபடுகிறது. ஆனால் இனி மக்கள் உங்க்ளை (திமுக) நம்பமாட்டார்கள் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

6 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

7 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

8 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

8 hours ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

9 hours ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

9 hours ago