கொரோனா வைரஸ் பாதிப்பின் காரண்மாக தமிழகத்தில், இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்’ என்ற தவறான தகவலை, திராவிட முன்னேற்ற கழகத் தலைவர், ஸ்டாலின், ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்ட, ஒரு மணி நேரத்தில் நீக்கினார்.அவர், ‘டுவிட்டர்’ பக்கத்தில், நேற்று, தமிழகத்தில், கொரோனாவால், ஒன்பது பேர் உயிரிழப்பு; 8,000 ஆயிரம் பேருக்கு பாதிப்பு;
சென்னை உள்ளிட்ட, மூன்று மாவட்டங்களைத் தனிமைப்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.இவ்வாறு, அவர் கூறியிருந்தார். ஆனால் தமிழகத்தில், ஒன்பது பேர் கொரொனா வைரஸ் பாதிப்பால் இறக்கவில்லை; இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் தான், ஒன்பது பேர். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் தவறான தகவலை தந்ததால், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்டாலின் தன் பதிவை, ஒரு மணி நேரத்தில் நீக்கினார். இதுபோன்ற தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றம் மற்றும் பீதியை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…