திமுக உட்கட்சி தேர்தல் விவகாரம்… இன்று கூடுகிறது மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அனல் பறக்கும் அண்ணா அறிவாலயம்…

Published by
Kaliraj

திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது  உட்கட்சி பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின்  தலைமை அறிவித்தது. இந்த தேர்தலில்  கிளை முதல், பேரூராட்சி , ஒன்றியம் , நகரம் மற்றும்  மாநகரம் வாரியாக உட்கட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது . இதனை தொடர்ந்து இதேபோல், மாவட்ட , தலைமை , பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க  தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில், முதல் கட்டமாக கிளைக்கழகத்திற்கும் அதனை தொடர்ந்து பேரூராட்சி , ஒன்றியம், கழகத்திற்கும் தேர்தல் நடைபெறும் என்றும். இதன் பின்னர் புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர் ,பொதுச்செயலாளர் ,பொருளாளர் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,  இன்று (பிப்ரவரி 17-ம் தேதி) இதற்க்காக திராவிட முன்னேற்ற கழக  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திராவிட முன்னேற்ற கழக  பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று  மாலை சரியாக 5 மணிக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த  கூட்டத்தில்  உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. 

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

2 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

3 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

3 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

4 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

5 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

5 hours ago