குஷ்பூ கண்ணீர் மல்க பேட்டி.! திமுக பேச்சாளர் டிஸ்மிஸ்.!

Published by
மணிகண்டன்

குஷ்பூ பற்றி அவதூறு பேச்சை தொடர்ந்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். 

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அண்மையில் கட்சி கூட்டத்தில் பேசுகையில், பாஜக பிரமுகரும், இந்திய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ பற்றி அவதூறு விளைவிக்கும் விதமாக மேடையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்துக்குள்ளனாது.

இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்த குஷ்பூ, பெண்களை பற்றி இப்படி பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது. கலைஞர் கருணாநிதி இருக்கும் போது இப்படிப்பட்ட பேச்சுக்கள் வரவில்லை. ஆனால் இப்போது அந்தமாதிரி பேச்சுக்கள் வருகின்றன. இது பெண்களை அவர்கள் அவமானப்படுத்தவில்லை. கலைஞரை அவமானப்படுத்துகின்றனர். யாரையும் நம்பி நான் தமிழகத்திற்கு வரவில்லை. என் திறமையை நம்பி இங்கே வந்தேன் என பேசி கண்கலங்கினார் மகளிர் உரிமை ஆணைய உறுப்பினர் குஷ்பூ.

இதனை தொடர்ந்து, திமுக கழக பேச்சாளர் சிவாஜி கிருஸ்ணமூர்த்தியை கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், கட்சிக்கு அவப்பெயர் தேடித்தரும் வகையில் செயல்படுத்தவும் கூறி கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பூ, கட்சி ரீதியாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்தது ரெம்ப சந்தோசம். இருந்தாலும் இதனை நான் சும்மா விடமாட்டேன். கட்சி நடவடிக்கை எடுத்துவிட்டது என நான் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க மாட்டேன். நிச்சயம் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

7 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

7 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

9 hours ago