குஷ்பூ கண்ணீர் மல்க பேட்டி.! திமுக பேச்சாளர் டிஸ்மிஸ்.!

Published by
மணிகண்டன்

குஷ்பூ பற்றி அவதூறு பேச்சை தொடர்ந்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். 

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அண்மையில் கட்சி கூட்டத்தில் பேசுகையில், பாஜக பிரமுகரும், இந்திய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ பற்றி அவதூறு விளைவிக்கும் விதமாக மேடையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்துக்குள்ளனாது.

இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்த குஷ்பூ, பெண்களை பற்றி இப்படி பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது. கலைஞர் கருணாநிதி இருக்கும் போது இப்படிப்பட்ட பேச்சுக்கள் வரவில்லை. ஆனால் இப்போது அந்தமாதிரி பேச்சுக்கள் வருகின்றன. இது பெண்களை அவர்கள் அவமானப்படுத்தவில்லை. கலைஞரை அவமானப்படுத்துகின்றனர். யாரையும் நம்பி நான் தமிழகத்திற்கு வரவில்லை. என் திறமையை நம்பி இங்கே வந்தேன் என பேசி கண்கலங்கினார் மகளிர் உரிமை ஆணைய உறுப்பினர் குஷ்பூ.

இதனை தொடர்ந்து, திமுக கழக பேச்சாளர் சிவாஜி கிருஸ்ணமூர்த்தியை கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், கட்சிக்கு அவப்பெயர் தேடித்தரும் வகையில் செயல்படுத்தவும் கூறி கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பூ, கட்சி ரீதியாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்தது ரெம்ப சந்தோசம். இருந்தாலும் இதனை நான் சும்மா விடமாட்டேன். கட்சி நடவடிக்கை எடுத்துவிட்டது என நான் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க மாட்டேன். நிச்சயம் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

6 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

7 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

8 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

8 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

9 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

10 hours ago