விசாரணையை சட்டப்படி எதிர்கொள்ள, திமுக துணை நிற்கும்; அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் ஸ்டாலின்.!

Published by
Muthu Kumar

அமலாக்கத்துறையின் விசாரணையை சட்டப்படி எதிர்கொள்ளுமாறு தொலைபேசியில் பொன்முடிக்கு முதல்வர் அறிவுரை.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மற்றும் அவரது மகன் திமுக எம்பி கெளதம சிகாமணி ஆகியோர் வீடு, அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வந்தனர். இந்த சோதனையானது சுமார் 9 நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்றது. இதனை அடுத்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

இருவரிடமும் தனித்தனியே சுமார் 7 மணிநேரம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் பொன்முடியிடம், தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் பேசியுள்ளார்.

Teleph stalin [Image-Twitter/@TNDIPRNEWS]

அதில் விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதல்வர், அமலாக்கத்துறையின் விசாரணைகளை துணிச்சலுடனும், சட்டபூர்வமாகவும் எதிர்கொள்ளுமாறு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார். ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை சட்ட ரீதியாக எதிர்க்க நமது திமுக துணை நிற்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின், பொன்முடியிடம் தெரிவித்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

11 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago