அனைத்து முயற்சிகளுக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும் -மு.க.ஸ்டாலின்

Published by
Venu

அனைத்து முயற்சிகளுக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,  1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ‘குடும்பச் சொத்தில் பெண்களுக்குப் பங்கு வழங்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றினார்”.”1989-ல் தலைவர் கலைஞர் அவர்கள் குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தார்”.

“தந்தை பெரியார் – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனையை 31 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றிய தலைவர் கலைஞர் அவர்களின் ‘குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை’ எனும் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது”.

“குடும்பச் சொத்தில் பெண்களின் உரிமையைக் காக்கும் சட்டத்தை பாஜக அரசு தடையின்றி நிறைவேற்ற வேண்டும்”.”நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றிட மத்திய – மாநில அரசுகள் முன்வர வேண்டும்”.பெண்களின் உரிமைகளைக் காத்திட மத்திய – மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

34 seconds ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

30 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago