குரூப் 4 தேர்வு குறித்து நம்பவேண்டாம் – டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

Published by
Edison

முன்னதாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடாமல் இருந்தது.ஆனால்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

தேர்வு எப்போது?:

இந்த சூழலில்,குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அறிவித்ததது. அதன்படி,கடந்த பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி,மே 21 ஆம் தேதி (சனிக்கிழமை) குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.மேலும்,ரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

தவறான அறிவிப்பு:

இதனிடையே,குரூப் 4 தேர்வு குறித்த தவறான அறிவிப்பு ஆணை இணையத்தில் வேகமாக வைரலாகி வருவதாகவும்,இது தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

குரூப் 4 தேர்வு எப்போது:

மேலும்,தேர்வாணையத்தின் அனைத்து அறிவிப்புகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும்,குரூப்-IV(குரூப் 4 தேர்வு)க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.அதனை  https://www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Recent Posts

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

59 minutes ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

1 hour ago

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

2 hours ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

3 hours ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

3 hours ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

4 hours ago