மாஸ்க் போடாமல் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தமிழகத்திலும் கொரோனாபாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியர்கள் என பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் 15க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாஸ்க் இல்லாமல் யாரும் வெளியில் செல்லாதீர்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…