மாஸ்க் போடாமல் வெளியில் போகாதீர்கள் – கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ!

Published by
Rebekal

மாஸ்க் போடாமல் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தமிழகத்திலும் கொரோனாபாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியர்கள் என பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் 15க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாஸ்க் இல்லாமல் யாரும் வெளியில் செல்லாதீர்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

5 minutes ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

41 minutes ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

1 hour ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

2 hours ago

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

3 hours ago