கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்…! கிஷோர் கே சாமி கைதை கண்டித்து அண்ணாமலை ட்வீட்…!

Published by
லீனா
  • அரசியல் தலைவர்களை அவதூறாக விமர்சித்த கிஷோர் கே சாமி கைது.
  • கிஷோர் கே சாமியை கைது செய்ததை கண்டித்து, பாஜக மாநில துணை தலைவர் கே.அண்ணாமலை ட்வீட்.

சமூகவலைதள பக்கங்களான, ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணைய பக்கங்களில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி என்பவர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி, இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் அவர்கள்  காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து கிஷோர் கே சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.

கிஷோர் கே சாமியை கைது செய்ததை கண்டித்து, பாஜக மாநில துணை தலைவர்  கே.அண்ணாமலை அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘திமுக குடும்பத்தை, அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில்,கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்கு உண்டா? பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு;திமுகவிற்கு அது இல்லை போல. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

26 minutes ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

1 hour ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

2 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

3 hours ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

4 hours ago