காலையிலேயே குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறாயா….? முதியவரை தாக்கிய நடத்துனர்…!

Published by
லீனா

பேருந்தில் பயணித்த முதியவரை தாக்கிய நடத்துனர். 

ஈரோடு அருகே சத்தியமங்கலத்திலிருந்து கவுந்தம்பாடி வழியாக ஈரோடு நோக்கி  அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பயணிகளுக்கு நடத்துனர் டிக்கெட் வழங்கி வந்த நிலையில், பேருந்தில் பயணித்த முதியவரிடம் நடத்துனர் டிக்கெட்டுக்கு சில்லறை கேட்டுள்ளார்.

இதில் நடத்துனர் மற்றும் முதியவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நடத்துனர் ஆத்திரத்தில் காலையிலேயே குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறாயா? என்று தகாத வார்த்தைகளினால் முதியவரை திட்டியுள்ளார். இதனையடுத்து முதியவர் தான் குடிக்கவில்லை என்று நடத்துனரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

நடத்துனர் மற்றும் முதியவரின் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. நடத்துனரின்  செயலை மற்ற பயணிகள் கண்டித்தனர். இது குறித்து நடத்துனர் கூறுகையில்  முதியவர் சைகையால் திட்டியதால் தான் முதியவரை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.  இதனை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில்  வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, நடத்துநர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

சென்னை : இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப…

32 minutes ago

”துணியைக் கட்டி மறைக்கும் பாஜக மாடல் அல்ல” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : நேற்றைய தினம் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. அதற்கு முன் தினமே…

1 hour ago

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல்! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

3 hours ago

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்கலாம்! தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

5 hours ago

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு – ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

5 hours ago

வானிலை அலர்ட்! பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் கனமழை வெளுக்கும்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,…

7 hours ago