நாளை கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ஆடம்பரமின்றி திமுகவினர் கொண்டாட வேண்டும் என்று முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. தொண்டர்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினம் தொடர்பாக தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு சில வேண்டுகோளை முன்வைத்து செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா அச்சுறுத்தலால் நாளை கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ஆடம்பரமின்றி திமுகவினர் கொண்டாட வேண்டும் என்றும் கொரோனா பரவலால் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நான் அஞ்சலி செலுத்த போகும் போது யாரும் கூட்டம் கூடாமல் அவரவர் இருந்த இடத்திலேயே பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். குறிப்பாக அவரவர் இடங்களிலேயே சமூக இடைவெளியை கடைப்பிடித்து பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…