சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம் – மக்கள் நல்வாழ்வுத்துறை.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை  வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமூக வலைதளத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான பொய்யான செய்திகள் தினமும் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸஅப் உள்ளிட்ட நிறுவனங்கள் போலியான தகவலை பரப்புவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், ஊரக மருத்துவம், சுகாதாரப் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் The Epidemic Diseases Act and Regulations பிரிவு 8-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, எந்த அங்கீகாரமும் இல்லாத சென்னை உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் என்பவர் சமூக வலைத்தளங்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டிபிடித்துவிட்டதாக பரப்பி வந்துள்ளார். 

இந்த தவறான செய்தி பொதுமக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால் அவர்மீது உடனடியாக உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அவர்களால் சென்னை, காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

2 minutes ago

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

56 minutes ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

1 hour ago

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

18 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

19 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

20 hours ago