சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம் – மக்கள் நல்வாழ்வுத்துறை.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை  வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமூக வலைதளத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான பொய்யான செய்திகள் தினமும் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸஅப் உள்ளிட்ட நிறுவனங்கள் போலியான தகவலை பரப்புவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், ஊரக மருத்துவம், சுகாதாரப் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் The Epidemic Diseases Act and Regulations பிரிவு 8-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, எந்த அங்கீகாரமும் இல்லாத சென்னை உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் என்பவர் சமூக வலைத்தளங்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டிபிடித்துவிட்டதாக பரப்பி வந்துள்ளார். 

இந்த தவறான செய்தி பொதுமக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால் அவர்மீது உடனடியாக உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அவர்களால் சென்னை, காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

1 hour ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

4 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago