என்றைக்கும் பழனிசாமி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைத்ததில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,ஆளுங்கட்சியான அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே வார்த்தை மோதல்கள் தொடர்நது நடைபெற்று வருகின்றன.அந்த வகையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,நான் நேரடியாக தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்று ஸ்டாலின் கூறி வருகிறார்.நான் எம்எல்ஏ-வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று தெரிவித்துள்ளார். முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.மக்களின் குறைகளை கேட்கும் ஸ்டாலின் ஏன் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை என்று பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆ.கொக்குளம் ஊராட்சி மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.அவர் பேசுகையில்,முதலமைச்சர் பெரிய புத்திசாலி போல பேசி இருக்கிறார். அவர் நேரடியாக யாரும் முதலமைச்சராக ஓட்டு போட்டு வர முடியாது என்று பேசியிருக்கிறார். கலைஞர் எப்படி நேரடியாக ஓட்டுப் போட்டு வந்தாரா? என்று ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்.யார் முதலமைச்சராக வரவேண்டும் என்று தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதி மக்கள் முடிவு செய்கிறார்கள். முடிவு செய்த பிறகு தான் அந்த கட்சியில் நிற்கும் சட்டமன்ற உறுப்பினருக்கு ஓட்டு போடுகிறார்கள். அது தான் உண்மை.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…