குட் நியூஸ்..!இனி இவர்களுக்கும் ‘இ-பதிவு’ வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு..!

Published by
Edison

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ‘இ-பதிவு’ செய்துகொள்வதற்கான வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.எனினும், தொழிற்சாலைகள்,அத்தியாவசிய பொருட்கள் விற்பனை,மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,அவசர தேவைக்கு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி,உரிய மருத்துவ காரணங்கள்,தொழிற்சாலைகளுக்கு செல்வோர் மற்றும் இறப்புகளுக்காக மட்டும், https://eregister.tnega.org/#/user/pass  என்ற இணையதளத்தில் இ-பதிவுக்கான அனுமதி அளிக்கப்பட்டு,உடனடியாக இ-பதிவும் கிடைத்து வந்தது.

இந்நிலையில்,தற்போது இந்த பிரிவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ‘இ-பதிவு’ செய்துகொள்வதற்கான வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால்,இனி தடையின்றி உதவிகளை வழங்க முடியும் என தன்னார்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதற்கு முன்னதாக,ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்வோருக்கு இ-பதிவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

1 minute ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

31 minutes ago

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

1 hour ago

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

2 hours ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

2 hours ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

2 hours ago