ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, டிடிவி தினகரன் அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாளை நாடு முழுவதும் ஏசுபிரான் உயிரித்தெழுந்த திருநாளான ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, டிடிவி தினகரன் அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘மனித குலத்திற்கு நற்போதனைகளை அளித்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பகையாலும், சிலுவை துரோகத்தாலும் சுமந்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்த திருநாள், எல்லாருக்கும் புதுவாழ்வைத் தந்திடும் நன்னாளாக அமையட்டும்;
மனிதகுலத்தைச் சூழ்ந்த துன்பங்கள் அனைத்தும் விலகட்டும். அன்புதான் உலகின் பெரும்சக்தி என்பதைப் போதித்த யேசுதாதரின் போதனைகளை என்றும் நம் நெஞ்சில் நிறுத்தி செயல்படுவோம். ஈஸ்டர் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்க்கட்டும்; அந்த மகிழ்ச்சி எந்நாளும் நிலைக்கட்டும் என வாழ்த்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…