ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, டிடிவி தினகரன் அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாளை நாடு முழுவதும் ஏசுபிரான் உயிரித்தெழுந்த திருநாளான ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, டிடிவி தினகரன் அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘மனித குலத்திற்கு நற்போதனைகளை அளித்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பகையாலும், சிலுவை துரோகத்தாலும் சுமந்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்த திருநாள், எல்லாருக்கும் புதுவாழ்வைத் தந்திடும் நன்னாளாக அமையட்டும்;
மனிதகுலத்தைச் சூழ்ந்த துன்பங்கள் அனைத்தும் விலகட்டும். அன்புதான் உலகின் பெரும்சக்தி என்பதைப் போதித்த யேசுதாதரின் போதனைகளை என்றும் நம் நெஞ்சில் நிறுத்தி செயல்படுவோம். ஈஸ்டர் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்க்கட்டும்; அந்த மகிழ்ச்சி எந்நாளும் நிலைக்கட்டும் என வாழ்த்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…