பொதுமக்கள் வசதிக்காக, செம்மஞ்சேரி காவல் நிலையம் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
குறிப்பாக சென்னையில், வெள்ளப்பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெள்ளநிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த இக்காட்டான சூழலில் காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் அனைவரும் முழுவீச்சுடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக, செம்மஞ்சேரி காவல் நிலையம் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை, J-10 செம்மஞ்சேரி காவல் நிலையம் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிகமாக சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் சாலை, முகமது சதக் கல்லூரிக்கு எதிர்புறம், எண்.14/17, முதல் தளம் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டு இயங்கிவருகிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுமக்கள் அவசர உதவிக்கு J-10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு.சீனிவாசன், கைபேசி எண் 94438-08523 மற்றும் செம்மஞ்சேரி காவல் நிலைய கைபேசி எண் – 94981 00172 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…