எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றம் தொடர்ந்த வழக்கில், அதிமுக கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் கட்சியின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படவேண்டும் எனவும் இந்த விதியை திருத்தமுடியாது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுச்செயலாளர் பதவியை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் பொதுச்செயலாளரை நீக்கியது கட்சிக்கு முரணானது எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை பொதுக்குழு, செயற்குழு நியமித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாகவும், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு தற்போதைய ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி இணைந்து பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டி பொதுச்செயலாளர் பதிவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியில் நடைமுறையில் உள்ள இரட்டை தலைமையையும் உறுப்பினர்கள் விரும்பவில்லை எனவும் கடந்த 2014 அக்டோபரில் நடத்தப்பட்ட உட்கட்சிதேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விரைவில் தேர்தலை நடத்துவதாகவும் உறுதி அளித்துவிட்டு ஓராண்டிற்கு மேல் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை என அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இந்த மனுவிற்கு ஜூலை 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி மற்றும் சசிகலாவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…