EdappadiKPalaniswami: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்குக – இபிஎஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்தால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என வேளாண்துறை அறிவித்திருந்தது. காவிரியில் நீர் வரத்து குறைந்து பயிர்கள் கருகும் நிலையில், விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறுவை சாகுபடிக்கு வழக்கமாக காப்பீடு செய்வதில்லை என்றபோதும் மாநில அரசு சார்பில் நிதி வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்தாண்டு குறுவை சாகுபடியில் 10 லட்சம் ஏக்கர் பயிரிடப்பட்ட நிலையில், 2 லட்சம் ஏக்கர் அறுவடையானது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குறுவை சாகுபடி பாதிப்பால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில், நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவரங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். தென்மேற்கு பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை மீண்டும் ஒருமுறை முழுமையாக கணக்கீட்டு காப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், ரூ.2,319 கோடி தொகை செலுத்தியுள்ள திமுக அரசு வெறும் ரூ.560 கோடி மட்டுமே இழப்பீடாக பெற்றுள்ளது எனவும் குற்றசாட்டியுள்ளார். 2021-22 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு வெறும் ரூ.100 முதல் ரூ.600 வரை மட்டுமே இழப்பீடு தரப்பட்டுள்ளது. போதிய நீர் இல்லாததால் சுமார் 3.50 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி கடும் பாதிப்பு அடைந்துள்ளது என்றும் கர்நாடகாவில் தன் கூட்டாளி காங்கிரஸ் அரசுடன் பேசி தண்ணீர் பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றசாட்டியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…

8 hours ago

திருநெல்வேலி..தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழை…அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…

9 hours ago

பாஜகவிடம் அடைக்கலம் புகுந்த தி.மு.க தலைமை…தவெக விஜய் கடும் தாக்கு!

சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…

9 hours ago

6 சிக்னல் கொடுத்த கருண் நாயர்..நோ சொன்ன அம்பையர்! டென்ஷனான பிரித்தி ஜிந்தா!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…

10 hours ago

இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…

12 hours ago

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

13 hours ago