[Image source : Enforcement Directorate Official Website]
சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், நேற்று தமிழ்நாட்டில் கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பிரபல தொழிலதிபர்கள் வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அதன்படி, புதுக்கோட்டையில் தொழிலதிபர் சாலை ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன், திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம், தொழிலதிபர் கோவிந்தன் உள்ளிட்டவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.
மணல்குவாரி, பெட்ரோல் பங்க், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை செய்து வரும் நிலையில், சோதனை நடப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழிலதிபரும், மணல் ஒப்பதாரருமான ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் ராமச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது . ராமச்சந்திரன் உறவினர் வீரப்பனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனுர் அருகே செவிட்டுரங்கன்பட்டி மணல் கிடங்கில் அமலாக்கத்துறை 2வது நாளாக சோதனை நடத்தி வருகிறது. இதுபோன்று, திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை 2ஆவது நாளாக சோதனை நடத்துகிறது.
மேலும், புதுக்கோட்டையில் பிரபல மணல் குவாரி உரிமையாளர் கரிகாலன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினத்தின் நெருங்கிய உறவினர் கரிகாலன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…