நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் கூறியது சட்டத்திற்கு உட்பட்ட கருத்து அல்ல என பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனபலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையிலும், திட்டமிட்டபடி இன்று நீட் தேர்வுகள் தொடங்கியது. மேலும், நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும், வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் கூறியது, சட்டத்திற்கு உட்பட்ட கருத்து அல்ல என பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், கல்வி வணிகமாக மாறியதை உடைக்கவே கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…