கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு.. அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமா? – பிரேமலதா

Published by
பாலா கலியமூர்த்தி

காவிரி நதிநீரை திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தஞ்சாவூரில் தேமுதிகவில் சார்பில்  இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தஞ்சையில் நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றபின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்து இரண்டு தினங்கள் தான் ஆகிருக்கு, இதனால் பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் கிடையாது. இரண்டு கட்சிகளுக்குள் பிரச்சனை இல்லை, இரண்டு தலைவர்களுக்கும் தான் பிரச்சனை.

இதனால் தான் கூட்டணி முறிந்துள்ளது. எனவே, அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும். அதனால் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் உள்ளது. அப்போது, யார் தலைமையில் கூட்டணி அமைகிறது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். கண்டிப்பாக தேமுதிக ஒரு நல்ல  முடிவை எடுக்கும், உரிய நேரத்தில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், இன்று 5  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அனைவரிடமும் கருத்து கேட்கப்படும், எங்களது கோரிக்கையை கண்டிப்பாக ஆளுநரிடம் அளிப்போம் என கூறினார். எனவே, காவிரி நீதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

9 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

41 minutes ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

48 minutes ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

2 hours ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

2 hours ago