#ELECTIONBREAKING: திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை! – சத்யபிரதா சாகு

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி மே 2ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொண்டார். வாக்கு எண்ணும்போது தொகுதிக்கு எத்தனை மேசைகளை அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் காணொலி மூலம் சாகு ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையால் வாக்கு எண்ணிக்கையில் தாக்கம் ஏற்படுமா என்பது குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடைபெற்ற நிலையில், திட்டமிட்டபடி தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் தலைமை அதிகாரி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களின் சுகாதார அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025