திமுக கூட்டணி தலைமையிலான தேர்தலில் போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது எந்தெந்த தொகுதிகள் யாருக்கு வழங்குவது என்பதை குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஏற்கனவே சட்டப்பேரவையில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.
இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், திமுக கூட்டணி தலைமையிலான தேர்தலில் போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான ஒப்பந்த கையெழுத்திடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
அதன்படி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…