திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஐந்து அம்ச கோரிக்கைகளோடு ஆதரவு.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேச்சுவார்த்தை நடத்திருந்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, தற்போதுள்ள அரசியல் சூழல் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்தும் விரிவாக விவதித்தோம் என தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து, மனிதநேய ஜனநாயக கட்சி ஐந்து அம்ச கோரிக்கைகளோடு உங்களது கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் நாங்கள் போட்டியிட தொகுதி ஒதுக்கீடு குறித்தும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
மதவாத சக்திகளுக்கு எதிரான வாக்குகள் சிதறி போகக்கூடாது என்ற அடிப்படையில் திமுக கூட்டணிக்கு ஆதரவை வழங்கிருக்கிறோம். ஐந்து அம்ச கோரிக்கைகளில் பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களை விடுதலை செய்யவேண்டும். பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். நீதியரசர் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமல்படுத்த வேண்டும்.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி எல்லா சமூக மக்களுக்கும் சமூக நீதியை வழங்கிட வேண்டும். அதேபோல் முஸ்லீம் மக்களின் இடஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இறுதியாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டங்களை நிறைவேற்ற மாட்டோம் என்று புதிதாக அமையக்கூடிய அரசு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை தமிமுன் அன்சாரி முன்வைத்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…