SenthilB Case j [DTnext]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரு நீதிபதிகள் அமர்வு, அமலாக்கத்துறை காவலில் எடுப்பது குறித்து இன்று தீர்ப்பு வழங்குகிறது.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் எனக்கூறி அவரது மனைவி, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் விசாரிக்கப்பட்டு மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், தனது தீர்ப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும், அவர் சட்டத்திற்கு உட்பட்டவர் என்றும் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கி, நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் தான் ஒத்துப்போவதாக கூறினார்.
மேலும் ஏற்கனவே வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு இதனை மீண்டும் விசாரிக்கும் என அறிவித்த நிலையில், இன்று இரு நீதிபதிகள் அமர்வு அமைச்சர் செந்தில் பாலாஜியை எப்போது அமலாக்கத்துறை காவலில் எடுக்கும் என்பது குறித்து பிற்பகல் தீர்ப்பு வழங்க இருக்கின்றனர்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…