செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் 2000 கன அடியாக அதிகரிப்பு.!

Published by
Ragi

தொடர் கனமழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதனால் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இன்று காலை ஏரிக்கு வரும் நீர்வரத்து 6000 கன அடியாக உயர்ந்துள்ளது.எனவே ஏரியிலிருந்து திறந்து விடும் உபரி நீரின் அளவு 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கிய நீர் ஆதாரமான ஸ்ரீபெரும்புதூர்,பிள்ளைபாக்கம் ஆகிய ஏரிகளும் ஏற்கனவே நிறைந்து விட்ட காரணத்தினால் தற்போது பெய்யும் மழையால் வரும் தண்ணீரை அப்படியே திறந்து விடப்படுகிறது .எனவே ஸ்ரீபெரும்புதூர்-குன்றுத்தூர் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது .எனவே சாலைகள் முடப்பட்டு போக்குவரத்து வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் அடையாற்றின் கரையோரம் வெள்ளத்தில் மிதக்கிறது .இந்த நிலையில் தற்போதும் அதிக அளவு உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வருவதால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை கவனமாக கண்காணித்து வருகின்றனர்

Published by
Ragi

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

44 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

1 hour ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

9 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

11 hours ago