டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
தமிழகத்தில் கடந்த மாதம் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து உயர்கல்வியில் சேர சேர்வதற்காக ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இன்றுடன் டிப்ளமோ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அக பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாமாண்டு பட்டய படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு 20.07.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 16940 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
04.08.2020 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருக்க நிலையில் கூடுதல் அவகாசம் கோரி மாணவர்கள் கேட்டுக் கொண்டதை ஏற்று பட்டயப் படிப்பு (Diploma) சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 20.08.2020 வரை மேற்கொள்ளலாம் என உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…