ரயில்களிலும், ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் -தெற்கு ரயில்வே

Published by
லீனா

ரயில்களிலும், ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, நாளை முதல் மீண்டும் புறநகர் ரயில் சேவைகள் தொடங்குகிறது. அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரத்திலும் புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்களுக்கு ரயிலில் பயணிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் Non-Peak Hours-ல் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, இரவு 7:30 மணி முதல் கடைசி ரயில் செல்லும் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அணியவில்லையென்றால் ரூ.500  அபராதம் விதிக்கப்படும் என்றும், ரயில் நிலைய வளாகங்களில் கூட்டமாக நிற்பதை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், ரயில் பயணிக்கும் போது,உங்களது ஆவணங்களை சரிபார்க்க ரயில்வே ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், கொரோனா பாசிடிவ் அல்லது காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

6 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

31 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

54 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

1 hour ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

16 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

17 hours ago