டிக்டாக்கால் சீர்குலைந்த குடும்பம்.! மனைவி மற்றும் மகள் பிரிந்த சோகத்தில் விபரீத முடிவு எடுத்த கணவர்.!

Published by
Ragi

மனைவி மற்றும் மகள் இருவரும் டிக்டாக் மூலம் பழக்கமானவர்களுடன் இறங்கி போனதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் செயலியால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் வந்துள்ளது. சமீபத்தில் அந்த செயலியை முடக்கியதை அடுத்து பலர் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். மேலும் இந்த டிக்டாக் செயலியால் பல குடும்பங்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது. அந்த வகையில் டிக்டாக்கால் ஒர்ஷாப் உரிமையாளர் ஒருவர் வீடியோ மூலம் மரண வாக்குமூலம் கூறிவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜி. என். பாலன்நகரை சேர்ந்தவர் ரவி(44).இவரது மனைவியான கனகவள்ளிக்கும்(35), ரவிக்கும் 16வயதில் ஒரு மகள் மற்றும் 15வயதில் ஒரு மகனும் உள்ளனர். திருப்பூரில் ஒர்க்ஷாப் நடத்தி வரும் ரவியின் வாழ்க்கை டிக்டாக் என்ற ஆப் மூலம் சீர்குலைந்துள்ளது. ஆம் ரவியின் மனைவி மற்றும் மகள் டிக்டாக்கில் மூழ்கி போனது மட்டுமில்லாமல் டிக்டாக் மூலம் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த நபருடன் கனகவள்ளி அறிமுகமாகி அது கள்ளதொடர்பாக மாறியுள்ளது. அதே போன்று ரவியின் மகளும் டிக்டாக்கில் ஒருவரை காதலித்துள்ளார் வந்துள்ளார். இதனையறிந்த ரவி இருவரையும் கண்டிக்க, அவர்கள் கேட்ட பாடில்லை.

இதனையடுத்து கடந்த 3ம் தேதி ரவியின் மனைவி மற்றும் மகள் வீட்டை விட்டு சென்று விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். உடனடியாக அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் ரவி புகாரளிக்க, போலீசாரும் கனகவள்ளியிடம் ரவியுடன் சேர்ந்து வாழ அறிவுறுத்த கனகவள்ளி அதனை மறுத்ததுடன் ரவியை தரக்குறைவாகவும், கேவலமாகவும் பேசியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரவி வீட்டில் சென்று தனது மரண வாக்குமூலத்தை வீடியோ மூலம் கூறி விட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விட்டு தூக்கில் தொடங்கியுள்ளார். அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறிய சூரம்பட்டியை சேர்ந்த 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிக்டாக்கால் ஒரு அழகான குடும்ப சீரழிந்தது மட்டுமில்லாமல் ஒரு உயிரையும் பறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி! 

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

12 minutes ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

55 minutes ago

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

2 hours ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

4 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

5 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

5 hours ago