எரிபொருள் விலை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் தேவையானது குறைய தொடங்கியது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலையானது கடந்த சில மாதங்களாக சரிவைக் கண்டு வந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 5 நாள்களில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.3 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஊரடங்கு தொடக்கத்தில் ரூ.72.28 இருந்த பெட்ரோல் இன்று ரூ.77.96-க்கும் ரூ.65.71 இருந்த டீசல் ரூ.70.64 க்கும் விற்படுகிறது.
ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாகப் பாதித்து விலைவாசி, பேருந்துக் கட்டண உயர்வுக்கும் வழி வகுக்கும் எரிபொருள் விலை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…