எரிபொருள் விலை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் தேவையானது குறைய தொடங்கியது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலையானது கடந்த சில மாதங்களாக சரிவைக் கண்டு வந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 5 நாள்களில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.3 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஊரடங்கு தொடக்கத்தில் ரூ.72.28 இருந்த பெட்ரோல் இன்று ரூ.77.96-க்கும் ரூ.65.71 இருந்த டீசல் ரூ.70.64 க்கும் விற்படுகிறது.
ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாகப் பாதித்து விலைவாசி, பேருந்துக் கட்டண உயர்வுக்கும் வழி வகுக்கும் எரிபொருள் விலை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…